×

நிலக்கோட்டை அருகே கள் விற்ற பெண் கைது

வத்தலக்குண்டு, பிப். 19: நிலக்கோட்டை அருகே தென்னங் கள் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு, கொங்கப்பட்டி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட தென்னங் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் நேற்று கிடைத்தது. அதன்பேரில் விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எத்திலோட்டில் கந்தசாமி என்பவரின் தென்னந்தோப்பின் அருகே விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த சக்தி ராக்கம்மாள் (40) என்பவர் பிளாஸ்டிக் குடத்தில் வைத்து தென்னைங் கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nilakkottai ,
× RELATED நிலக்கோட்டை அருகே ஊழியர் பணம் திருடி...