×

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பாலக்கோடு, பிப்.18:பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாலக்கோடு வட்டார வள மையம் சார்பில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாலக்கோடு அரசு ஆண்கள் பள்ளி தலைமையாசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார். பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகுணா சிறப்புரையாற்றினார். ஆசிரியர் பயிற்றுநர்கள் குணசேகரன், சேகர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், குழந்தைகள் உரிமைகள், பள்ளிக்கு கல்வி சீர் வழங்குதல், பள்ளி கல்வி முன்னேற்றத்தில் சமுதாயத பங்களிப்பு, பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு, அனைவரும் கல்வி கற்க அரசின் உதவிகள், மாணவர்கள் இடைநிற்றலை தடுத்தல், பள்ளி பாதுகாப்பு பணிகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் பாலக்கோடு குறு வள மையத்துக்குட்பட்ட 13 பள்ளிகளிலிருந்து 78 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags : school management team members ,
× RELATED விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி ஆலோசனை...