×

பென்னாகரம் அருகே போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் முற்றுகை

பென்னாகரம், பிப்.18: பென்னாகரம் ஏரியூர் அருகே ஏர்கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் செம்மலை(23), பட்டாரி வாலிபர். வேலை தேடி வருகிறார். இவர் மச்சூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் மோனிஷா(19) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். இது குறித்து மோனிஷாவின் தந்தை, ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில், தனது மகளை செம்மலை கடத்தி சென்றதாக புகார் அளித்தார். இந்நிலையில், வீட்டை விட்டு ஓடிச்சென்ற இருவரும் திருமணம் செய்து கொண்டதாக, உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, போலீஸ் ஸ்டேஷனை நேற்று இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி மேகலா சம்பவ இடத்திற்கு சென்று, பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : police station ,Pennagaram ,
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...