×

அதியமான்கோட்டையில் சுற்றுச்சுவர் இடித்து சேதம்

தர்மபுரி, பிப்.17: தர்மபுரி- சேலம் மெயின்ரோடு அதியமான்கோட்டை ரயில்வே கேட் அருகே தர்மபுரி மாவட்ட நாடார் சங்கத்திற்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்தநிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதியமான்கோட்டை ரயில்வே கேட் அமைக்கும் பணி நடக்கிறது. நாடார் சங்க நிலத்தின் வழியாக பொதுவழிக்கு இடம் கேட்கப்பட்டிருந்தது. தமிழக அரசு நாடார் சங்கத்திடம் நிலம் கேட்டு வாங்கும்பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் நிலம் உள்ள தொழிலதிபர் ஒருவர், நாடார் சங்க நிலத்தின் சுற்றுச்சுவரை பொக்லைன் மூலம் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் சங்க நிர்வாகிகளை தவறான வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் அதியமான்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். அதியமான்கோட்டை போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா