×

ஆரணி அருகே விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

ஆரணி, பிப்.12: ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள தச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(49), விவசாயி. பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரன்(69). இவருக்கும் இடையே வீட்டின் அருகே குப்பை கொட்டுவது, கழிவுநீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி மீண்டும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த சந்திரனின் மருமகன் குமரேசன்(24), அவரது நண்பர் நந்தகுமார்(22) ஆகியோர், இரும்பு கம்பியால் தங்கவேலுவை சரமாரி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த தங்கவேல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து தங்கவேல் களம்பூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குமரேசன், நந்தகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போளூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சந்திரனை தேடிவருகின்றனர்.

Tags : Arani ,
× RELATED ஜேசிபி, டிப்பர் லாரிகளை சிறைபிடித்த...