×

இலக்கியம்பட்டியில் ₹65 லட்சத்தில் தார்சாலை பணி

தர்மபுரி, பிப்.12:இலக்கியம்பட்டி ஊராட்சியில், ₹65 லட்சத்தில் தார்சாலை பணிகளை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செந்தில் நகரில், புதிதாக தார்சாலை ₹30 லட்சத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை செந்தில் நகரில் நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இதே போல், உங்கரானஅள்ளி ஊராட்சியில் ₹35 லட்சம் மதிப்பில் தார்சாலை பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ், பிடிஓக்கள் ஆறுமுகம், ரவிச்சந்திரன், நாகராஜ், செந்தில், வெங்கடேஷ், செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா