×

கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கந்தர்வகோட்டை, பிப். 11: கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடநதது.
கல்லூரி முதல்வர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். அறந்தாங்கி துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலக மருத்துவ அலுவலர் (தொற்று நோயியல் நிபுணர்) மருத்துவர் ஜெயப்பிராகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தார்.

புதுநகர் ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அதிகாரி ஹரிவிக்னேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பு முறைகள் பற்றி செயல்விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் புதுநகர் சுகாதார நிலைய மருத்துவர் சந்தோஷ், ஆய்வாளர்கள் முத்துக்குமார், திருநாவுகரசு, கல்லூரி விரிவுரையாளர்கள் கிருஷ்ணவேணி, உத்திராபதி, வெங்கட்ராஜ், வீரப்பன், வேல்முருகன் மற்றும் பொருளாளர் மணிவேல் பிரகாஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் சையது ஆலம் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags : Gandharvagoda ,Government Polytechnic College ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...