×

தகவல் உரிமை சட்டம் குறித்த பயிற்சியரங்கு

திருமங்கலம், பிப்.11: திருமங்கலத்தில் தகவல் அறியும் உரிமைசட்டம் மற்றும் புகார்களை பதிவு செய்திடும் முறைகள் குறித்த ஒருநாள் பயிலரங்கம் நடந்தது. சட்டபஞ்சாயத்து இயக்கம், காம்ரேட் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த பயிலரங்கில் அறக்கட்டளை தலைவர் முகமதுரபி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெய்லாணி முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை எப்படி கேட்டு பெறுவது என்பதனை அறிந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சந்திரசேகர், சட்டபஞ்சாயத்து இயக்கநிர்வாகி கண்னையா, அறக்கட்டளை செயலாளர் ரியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...