×

பூலாம்பட்டி சுற்றுவட்டாரத்தில் நெற்பயிர் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்

இடைப்பாடி, பிப்.11:  பூலாம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர் அறுவடையில்  விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டை ஆகிய நீர்மின் கதவணைகளில் மின்சார உற்பத்திக்காக தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, காவிரி கரையோரங்களில் பயிர்கள் சாகுபடி செய்ய உகந்த இடமாக உள்ளது. விவசாயிகள் பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி மேற்கொண்டனர். தற்போது செழித்து வளர்ந்துள்ள நெற்பயிர் அறுவடை பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தற்போது இயந்திரங்கள் மூலம் நெல் வயலில் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Poolampatti ,
× RELATED காளியம்மன், மாரியம்மன் கோயில் தீ மிதி விழா