×

கொடுமுடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு

ஈரோடு, பிப்.11: கொடுமுடி பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கொடுமுடி, ஊஞ்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், விவசாய நிலங்களுக்கு சரிவர தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருவதோடு சிறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பொதுமக்கள் கூறியதாவது:ஊஞ்சலூர், கொடுமுடி பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் மாதத்திற்கு இரண்டு நாட்கள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தனியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், வயல்களுக்கு தண்ணீர் முறையாக பாய்ச்ச முடிவதில்லை. சிறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்களும் தொடர்ச்சியாக வேலை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அறிவிக்கப்படாத மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Tags : Kodumudi ,
× RELATED 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி:...