×

வாட்ஸ்அப்பில் ஆபாச படம் பகிர்ந்ததால் போக்சோவில் வாலிபர் கைது

சென்னை: சிறுமிகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து, வாட்ஸ்அப்பில் பகிர்ந்த வாலிபரை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.செங்கல்பட்டு அடுத்த பாலூர் பழைய சீவரத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகன் சபரிநாதன் (19). இவர், கடந்த ஒரு ஆண்டாக சிறுமிகள் ஆபாச படங்களை செல்போனில் பதிவிறக்கம் செய்து, அதை வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதுபற்றி அறிந்த செங்கல்பட்டு போலீஸ் சோசியல் மீடியா பிரிவைச் சேர்ந்த கோபி  என்பவர், செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் (போக்சோ) சபரிநாதனை கைது செய்தனர். பின்னர், அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆபாச படம் பார்த்ததற்காகவும், அதை நண்பர்களுக்கு பகிர்ந்ததர்காகவும் வாலிபர் ஒருவர் கைதாவது இதுவே முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் வேறு யாராவது ஈடுபட்டு வருகின்றனரா என மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags : Plaintiff ,
× RELATED திருமண தகவல் மையம் மூலம் பெண்களை...