×

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை

இளம்பிள்ளை, பிப். 6: மகுடஞ்சாவடி  வட்டாரத்தில் உள்ள கே.கே. நகர், ராசிகவுண்டனூர், சின்ன மாரியம்மன் கோயில்  உள்ளிட்ட அரசு பள்ளிகளில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள்  படித்து வருகின்றனர். ஆனால், இந்த அரசு பள்ளிகளில் போதிய அளவு ஆசிரியர்கள்  இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு  பாடம் கற்பிப்பதில், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர். போதிய ஆசிரியர்கள்  இல்லாததால், மாணவர்களின் ஆரம்ப கல்வி கேள்விக்குறியாக உள்ளது. எனவே, கல்வி  அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை  கணக்கிட்டு, தேவைக்கேற்ப ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : teachers ,government schools ,region ,Makutanjavadi ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...