கிருஷ்ணகிரி, பிப்.4: ராயக்கோட்டை அருகே உள்ள மொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி ராணி(34). இவர் ஊருக்கு செல்வதற்காக ராயக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்றிருந்தார். அப்போது அவர் தனது பையில் ஒன்றரை பவுன் செயினை வைத்திருந்தார். இதனை ராணியின் அருகில் இருந்த பெண் ஒருவர் நைசாக எடுத்து கொண்டு, அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதை கவனித்த ராணி, கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ராணியிடம் நகை திருட முயன்றவர் சேலம் அயோத்தியாபட்டணத்தை சேர்ந்த பசவன் மனைவி முனிலட்சுமி(47) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராயக்கோட்டை போலீஸ் எஸ்ஐ மகாலிங்கம், முனிலட்சுமியை கைது செய்து சிறையில் அடைத்தார்.