×

சைக்கிளில் சென்றவர் டூவீலர் மோதி பலி

காரைக்குடி, பிப். 4:  காரைக்குடி அருகே சைக்கிளில் சென்ற வாலிபர் டூவீலர் மோதி பலியானார். காரைக்குடி அருகே உள்ள மாலையிட்டான்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் மகன் குமார் (20). இவர் நேற்று காலை சைக்கிளில் ஆவுடைபொய்கை - சூரக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரைக்குடி கீழத்தெருவை சேர்ந்த விஸ்வநாதன் மகன் சேகர்(40) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் குமார் மீது மோதியது. இதில் சைக்கிளில் சென்ற குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இரு சக்கர வாகனத்தில் சென்ற சேகரும் பலத்த காயமடைந்து காரைக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags :
× RELATED மஞ்சுவிரட்டில் 15 பேர் காயம்