×

நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்கு சுந்தரலிங்க குடும்பனார் பெயர் சூட்டி சிலை வைக்க கோரிக்கை

வத்தலக்குண்டு, பிப். 4: நிலக்கோட்டை பஸ் நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்க குடும்பனார் பெயர் சூட்டி, அவரது திருஉருவ சிலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பேரூராட்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரமான நிலக்கோட்டைக்கு தினமும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, கொடைக்கானல் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையம் தற்போது புனரமைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நிலக்கோட்டை பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் சுந்தரலிங்க குடும்பனார் பெயர் சூட்டி அவரது முழு திருவுருவச் சிலை நிறுவ வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை நிறுவனர் இராமர் பாண்டியர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி அலுவலர் செந்தில்குமாரிடம் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் பாண்டியர் தலைமையில் நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் காளிமுத்து, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் மணி பாண்டியர், வத்தலக்குண்டு பகுதி செயலாளர் சாந்தகுமார், செம்பட்டி ராஜா மற்றும் கட்சி தொண்டர்கள் மனு கொடுத்தனர்.

Tags : Sundaralinga ,bus station ,Nilakkottai ,
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்