×

கொடைரோடு அருகே விபத்து ஏரியாவில் பேரிகார்டு வைப்பு

வத்தலக்குண்டு, ஜன. 31: கொடைரோடு அருகே விபத்து பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே சடையாண்டிபுரம் பிரிவில் 2 கார்கள் மோதி கொண்ட விபத்தில் 5 பேர் பலியாகினர். அதேபோல் கடந்த வாரம் இந்த இடத்தில் சபரிமலை சென்று திரும்பிய பக்தர்கள் 3 பேர் கார் விபத்தில் பலியானார். வாகனங்களின் அதிவேகம் மற்றும் அந்த இடத்தில் வழக்கமாக வைக்கப்படும் பேரிகார்டு வைக்காததே விபத்திற்கும், உயிர்பலிக்கும் காரணமென தினகரன் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கு பேரிகார்டு வைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில் அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Pericard ,accident area ,Kodirod ,
× RELATED திண்டுக்கல் முதல் கொடைரோடு வரை...