×

தியாகி சுப்ரமணிய சிவா பேரவை சார்பில் காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

தர்மபுரி, ஜன.31:  பாப்பாரப்பட்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், காந்தியடிகளின் 72வது நினைவு தினத்தை முன்னிட்டு, தியாகி சுப்ரமணிய சிவா பேரவை சார்பில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரவை துணை அமைப்பாளர் முருகேசன் தலைமை வகித்தார். பேரவை நிர்வாகி சமதர்மம் முன்னிலை வகித்தார். பேரவை நிர்வாகிகள் தர்மராஜன், சிலம்பரசன், ரஜினி, சுப்பிரமணி குணசேகரன், வேடியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கைவிடக்கோரி, தர்மபுரியில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து துண்டறிக்கை வழங்கி பாப்பாரப்பட்டி மெயின் ரோடு, பஸ் நிலையம் தர்மபுரி ரோடு, பென்னாகரம் மெயின் ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்யப்பட்டது.

Tags : Gandhi Memorial ,Tyagi Subramania Siva ,
× RELATED டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி...