×

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

பாப்பிரெட்டிப்பட்டி, ஜன.31:  பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நேற்று மகாத்மா காந்தியின் 72வது நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவ, மாணவிகளிடையே தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் கலந்துகொண்டு, தீண்டாமை பற்றி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில், கல்லூரியின் அனைத்து துறை பேராசிரியர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா