×

காரிமங்கலம் மலை கோயிலில் திருப்பணி தொடக்கம்

காரிமங்கலம், ஜன.31:  காரிமங்கலம் மலைக்கோயிலில் நடந்த திருப்பணி தொடக்க சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். காரிமங்கலத்தில் மலை குன்றின் மீது அமைந்துள்ள அபிதகுஜாம்பாள் சமேத அருணேசுவரர் கோயில் திருப்பணி தொடக்க விழா மற்றும் பாலாலய பூஜை, நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. இதில், தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் மல்லிகா அன்பழகன், கெரகோடஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி சம்பத் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் அமைச்சர் அன்பழகன் தலைமையில், உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சின்னசாமி, அர்ச்சகர் புருஷோத்தமன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் பெருமாள், செந்தில்குமார், சீனிவாசன் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags : Karimamangalam Hill Temple ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா