×

காந்தி நினைவுநாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

ஈரோடு, ஜன.31: ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருங்கல்பாளையத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், மண்டல தலைவர்கள் ஜாபர்சாதிக், அய்யூப்அலி, மாவட்ட துணைத்தலைவர்கள் வெங்கடாசலம், பாஸ்கர்ராஜ், மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயபாஸ்கர், புனிதன், சிறுபான்மைபிரிவு பாட்சா, மகிளா காங்கிரஸ் புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்திசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் தளபதி ரமேஷ், பூவைராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congressmen ,Gandhi Memorial ,
× RELATED டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி...