×

தாயுடன் சென்ற கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்

புதுச்சேரி,  ஜன. 30: புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகரில் தாயுடன் ரோட்டில் நடந்து சென்ற  கல்லூரி மாணவியின் சுடிதாரை பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
 புதுவை  லாஸ்பேட்டை கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் தம்பு கார்த்திக் (42). ரவுடியான  இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது மனைவி லீமா  ரோஸ் (40). நேற்று முன்தினம் இவர் சென்னை தனியார் கல்லூரியில் பயிலும் தனது  மகளுடன் கிருஷ்ணா நகர் 17வது கிராஸ் சந்திப்பில் நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையோரம் நின்றிருந்த ஒருவாலிபர்  திடீரென கல்லூரி மாணவியின் சுடிதாரை பிடித்து இழுத்து அவரை மானபங்கப்படுத்த  முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாயார் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர்  ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து தங்களது பாணியில் விசாரித்தனர்.  

அப்போது சைக்கோ பாணியில் அவர் இவ்வாறு நடந்தது தெரியவந்தது. பின்னர்  அவர், லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர்  நாகராஜ் மேற்பார்வையில் எஸ்ஐ கீர்த்தி தலைமையிலான போலீசார், பிடிபட்ட நபர்  மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்  அவர், திலாஸ்பேட்ைட, புதுத்தெருவில் வசிக்கும் பாபு (26) என்பதும், தனியார்  நிறுவனத்தில் பணியாற்றுவதும் தெரியவந்தது. இதையடுத்து பாபுவை கைது செய்த  போலீசார் நேற்று முன்தினம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு  சிறையில் அடைத்தனர். வேறு பெண்களிடமும் இதுபோன்ற செயல்களில் அவர்  ஈடுபட்டாரா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags : college student ,Silmisam ,
× RELATED கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: மேலும் 3 பேர் கைது