×

கடத்தூர் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கடத்தூர், ஜன.29: கடத்தூர் அருகே கர்த்தானூர்- சந்தப்பட்டி செல்லும் பழுதடைந்த சாலையை சீரமைக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அடுத்த கர்த்தானூர்- சந்தப்பட்டி இடையிலான பிரதான சாலை உள்ளது. இந்த சாலையை சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால் வானங்கள் அடிக்கடி பழு ஏற்படுகிறது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் மக்கள் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : road ,Kadathur ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி