×

மாரண்டஅள்ளி அருகே எருதாட்டம் கோலாகலம்

பாலக்கோடு, ஜன.24: மாரண்டஅள்ளி அருகே எருதாட்ட விழா கோலாகலமாக நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாரண்டஅள்ளி அருகே பன்னி கிராமத்தில், நேற்று எருதாட்டம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராயக்கோட்டை, வெள்ளிச்சந்தை, மல்லாபுரம், பஞ்சப்பள்ளி, புதூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அங்கிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, இளைஞர்கள் அடக்க முயன்றனர். அப்போது 10க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எருதாட்டத்தை காண வந்த பொதுமக்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Burial Ground ,Marantaalli ,
× RELATED தமிழகம் வந்த 4 மீனவர்களின் உடல்களை...