×

பள்ளி ஆண்டு விழா

பெரியகுளம், ஜன. 23: பெரியகுளம் அருகே லெட்சுமிபுரத்தில் ஸ்ரீரேணுகா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 17வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் லதா ஜெகதீசன் தலைமை வகித்தார். பள்ளியின் செயலாளர் விஜயராணி மற்றும் இணைச்செயலாளர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் மருதமாலதி வரவேற்று பள்ளி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில், தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகாதேவி பல்வேறு விளையாட்டு மற்றும் கவிதை, கட்டுரை போட்டிகள் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் லெட்சுமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெயமணிசந்திரன், லெட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரேவதிஅசோக், பெரியகுளம் மாவட்டக்கல்வி அலுவலர் பாலாஜி, தேனி மாவட்டக்கல்வி அலுவலர் ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விழாவில், பள்ளி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏராளமான பெற்றோர், ஆசிரிய ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

Tags : School Anniversary ,
× RELATED ஆதனூர் அரசு பள்ளி ஆண்டுவிழா