×

பாமக நோட்டீஸ் விநியோகம்

தர்மபுரி, ஜன.23: தர்மபுரி மாவட்ட பாமக சார்பில், துண்டறிக்கை விநியோக நிகழ்ச்சி நல்லம்பள்ளி கிராமத்தில் நடந்தது. மாநில துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார். நல்லம்பள்ளி கிராமத்தில் வீடுகள், கடைகள், பொதுமக்களிடம் நடைப்பயணமாக சென்று நோட்டீஸ் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் முழுவதும் துண்டறிக்கை விநியோகம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம், ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, காமராஜ், சின்னசாமி, அன்னைமுருகேசன், சிவப்பிரகாசம், சம்பத், சாந்தினி, முருகன், மனோகரன், ராஜீவ்காந்தி, முனிவேல், அன்புகார்த்திக், சிலம்பரசன், சக்தி, ராஜா, ஜெயக்குமார் உள்ளிட்ட பாமகவினர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா