×

தர்மபுரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி, ஜன.23: தர்மபுரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (24ம் தேதி) நடைபெறவுள்ளது. இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. அரசு துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி, நேர்முகத் தேர்வு கடிதம் அனுப்பப்படும்.  இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேஷியர், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண் மற்றும் அனைத்துவித ல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள், நாளை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Tags : employment camp ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி