×

பெரியார் குறித்து அவதூறு கருத்து ரஜினி மீது நடவடிக்கை கோரி பவானி போலீசில் புகார்

பவானி, ஜன.22: திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு  வடக்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி,  அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் வேல்முருகன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட  செயலாளர் வேங்கை பழனிச்சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் செம்பான் ஆகியோர்  பவானி காவல் நிலையத்தில் நடிகர் ரஜினி மீது புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கூறி இருப்பதாவது:- கடந்த  14ம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பகுத்தறிவு மாநாடு பேரணியில் ராமன், சீதை குறித்து உண்மைக்கு புறம்பாக கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்தது. எனவே, நடிகர் ரஜினி மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Tags : Bhavani ,Rajini ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்