×

விதி மீறிய 100 பேர் மீது வழக்கு

தர்மபுரி, ஜன.22: தர்மபுரியில் நடந்த வாகன தணிக்கையில், போக்குவரத்து விதி மீறிய 100 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையிலும், திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலைய போலீசாரும் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தர்மபுரி-பாலக்கோடு சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த 30 பேர், உரிமம் புதுப்பிக்காத வகையில் 30 பேர், அதிக பாரம் ஏற்றி வந்த 20 சரக்கு லாரிகள், போக்குவரத்து விதி மீறிய 20 வாகன ஓட்டிகள் என 100 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

Tags : violators ,
× RELATED விதிகளை மீறிய 1,845 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து