×

வேளாண் அதிகாரி தகவல் ஜெயங்கொண்டத்தில் சாரண, சாரணியர்களுக்கான பயிற்சி முகாம்


ஜெயங்கொண்டம்,ஜன.22: ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாரண சாரணியர்களுக்கான திருதிய சோபான் நிலை பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. பயிற்சி முகாமிற்கு மாவட்ட பயிற்சி ஆணையர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இளங்கோவன் மற்றும் ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சாரணர் வரலாறு, சாரணர் உறுதிமொழி, சட்டம், ,பாடல்கள் ,கொடிகள், முதலுதவி செய்வது, மதிப்பீடு செய்தல், வனக்கலை குறியீடுகள், முடிச்சுகள், மற்றும் கூடாரம் அமைத்தல் முதலான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பயிற்சிகளை செந்துறை கல்வி மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் அளித்தனர்.

இம்முகாமில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாநில ஆளுநர் விருது பெற்ற 72 சாரணர்கள் மற்றும் 79 சாரணியர்களுக்கு விருதுக்கான சான்றிதழ்கள், சாரண சாரணிய ஆசிரியர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்ற 23 ஆசிரியர்களின் பயிற்சி சான்றுகளையும், மாநில ஆளுநர் விருதுக்கு சாரண சாரணியர் களை தயார் செய்த ஆசிரியர்களுக்கும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சான்றிதழ்களை வழங்கினார். பயிற்சி முகாமில் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தை சார்ந்த 14 பள்ளிகளிலிருந்து 210 சாரண சாரணியர்கள் பங்கேற்றனர்.

Tags : Training Camp ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்