தர்மபுரி, ஜன.21:பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய, சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம் என்பதை பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தர்மபுரி மாவட்ட பாமக சார்பில் இன்று (21ம்தேதி) காலை 10 மணிக்கு, தொப்பூர்(தொம்பரகாம்பட்டி) சுங்கச் சாவடி அருகில், எனது தலைமையில் துண்டு பிரசுரம் விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். எனவே, பாமக மற்றும் இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பசுமைத் தாயகம், சமூக ஊடகப் பேரவை, பாட்டாளி தொழிற்சங்கம், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் அணி துணை பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.