தா.பழூர், ஜன. 21: தா.பழூர் அடுத்த கொலையனூர் தெற்கு தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரசாத் (22) . இவர் லோடு ஆட்டோவில் ஆடுகளை ஏற்றி கொண்டு விக்ரமங்கலம் சென்றார். பின்னர் ஆடுகளை இறக்கி விட்டு வி்ட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது திடீரென வாகனத்தில் ஏற்பட்ட மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். ஆனாலும் லோடு ஆட்டோ முற்றிலும் எரிந்து சாம்பலானது. இகுறித்து விக்ரமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.