ஈரோடு, ஜன. 20: ஈரோடு சக்தி சிறப்பு பள்ளிக்கூடம் மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடினர். இந்த விழாவுக்கு அறங்காவலர் துரைசாமி தலைமை தாங்கினார். சாந்தி துரைசாமி முன்னிலை வகித்தார். சக்தி மருத்துவமனை டாக்டர் குருமூர்த்தி, ராணி குருமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மறுவாழ்வு மையத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொங்கல் வைக்கப்பட்டது.