×

போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் போலீஸ்காரரை தாக்கிய 3 வழக்கறிஞர்கள் கைது

சென்னை: ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருவில், டாஸ்மாக் கடை எதிரில் நேற்று முன்தினம் 3 பேர் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தலைமை காவலர்  அங்கமுத்து  சம்பவ இடத்துக்கு சென்று, ரகளையில் ஈடுபட்ட 3 பேரையும் கலைந்து செல்லும்படி கூறினார். இதில், ஆத்திரமடைந்த அவர்கள், அங்கமுத்துவை சரமாரி தாக்கி, அவரது  வலது  கையை முறித்து கட்டை விரலை உடைத்துள்ளனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அங்கமுத்துவை மீட்டு, அந்த 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், செங்குன்றத்தை சேர்ந்த பாலாஜி, கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த சக்திவேல், பெரியகுளத்தை சேர்ந்த மருதுபாண்டி என்பதும், இவர்கள் மூவரும் வழக்கறிஞர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Tags : lawyers ,policeman ,
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...