×

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

பாடாலூர், ஜன. 12: ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கண்ணு.
விவசாயி. இவரது மனைவி அம்சவள்ளி (45). இவர்கள் இருவருக்கும் குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அம்சவள்ளி நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை