×

அம்மன் கலை கல்லூரியில் பொங்கல் பரதநாட்டிய விழா

ஈரோடு, ஜன. 12:  சித்தோடு அம்மன் கலை, அறிவியல் கல்லூரியில் சென்னை தமிழ்நாடு- இயல் இசை நாடக மன்றம் சார்பில் பொங்கல் பரதநாட்டிய விழா நடந்தது.கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். கல்லூரியின் நிர்வாக இயக்குனர் பாலகுமார் முன்னிலை வகித்தார். சேலம் மதுவிலக்கு மத்திய மண்டல காவல்துறை எஸ்.பி சிவகுமார், வித்யா, சென்னை வருமான வரித்துறை அதிகாரி சம்பூர்ணம் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கிவைத்தனர்.இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் மாணவி நிவேதா சங்கரநாரயணன் பரதநாட்டியம் ஆடினார்.
விழாவில், ஆடிட்டர் கணேஷ், வாழ்க வளமுடன் அய்யாவு, சண்முகா சில்க்ஸ் மாப்பிள்ளை ரவி, கே.பி.கே பெட்ரோல் பங்க் உரிமையாளர் குமாரசாமி, ஈரோடு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு துணைத் தலைவர் உதயம் செல்வம், மாரீஸ் வேணுகோபால், அரிமா பந்தா செல்வம், தொழிற்சங்கத்தலைவர் ராவணன், அவல்பூந்துறை பகவதி அம்மன் கோயில் நிர்வாகிகள் குமாரசாமி, விஸ்வநாதன், பூபதி, கவிதாலயம் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Pongal Bharatanatyam Festival ,Amman College of Arts ,
× RELATED காந்தி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு