×

மாரண்டஅள்ளி அருகே வீட்டில் தீ விபத்து

பொருட்கள் நாசம்தர்மபுரி, ஜன.12: மாரண்டஅள்ளி அடுத்த வட்டகானம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(37). நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினர் அனைவரும் உறங்க சென்றனர். இந்த நிலையில் திடீரென வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிவக்குமார், அறையினுள் சென்று பார்த்த போது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக குடும்பத்தினரை வீட்டின் வெளியே அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் வீடு முழுவதும் தீப்பற்றியது. பின்னர், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் சிவக்குமார் தீயை அணைத்தார். இந்த விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின் பேரில் மாரண்டஅள்ளி போலீசார் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : home ,Marantaalli ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு