×

ஏரியில் மூழ்கி மனநலம் பாதித்த வாலிபர் பலி

அரியலூர், ஜன. 10: செந்துறையில் ஏரியில் மூழ்கி மனநலம் பாதித்த வாலிபர் பலியானார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நெய்வனம் கிராமத்தை சேர்ந்த சக்தி மகன் ஜீவா (30). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் செந்துறை கடைவீதியில் சுற்றி திரிவது, சிலர் கொடுக்கும் உணவுவை சாப்பிடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பேருந்து நிலையம் அருகே உள்ள சித்தேரிக்கு சென்றார். அப்போது ஏரி தண்ணீரி–்ல் தவறி விழுந்து தத்தளித்து மூழ்கினார். இதை பார்த்ததும் தீயணைப்பு துறை, காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : lake ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு