×

பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்

அலங்காநல்லூர், ஜன.9: பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பாலமேட்டில் உள்ள வாடிவாசல் உள்ளிட்ட மஞ்சமலை ஆற்றுப்பகுதியில் இரண்டடுக்கு தடுப்பு வேலி அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த பணிகளுக்கான ஏற்பாடுகளை பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கனகராஜ் உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். இதேபோல் பாலமேடு பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளுக்கு சென்று பதியும் பணியும் நடந்து வருகிறது. பாலமேடு கால்நடை மருத்துவர் சுரேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு காளைகளை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கி வருகின்றனர்.

Tags :
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...