×

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 100 பேர் கைது கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல், ஜன. 9: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கொடைக்கானலில் தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 100 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. கொடைக்கானல் அண்ணா சாலையில் முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் சேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தியதுடன், அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து கொடைக்கானல் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

Tags : Kodaikanal ,post office ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்