×

காதலித்த பெண்ணை மணமுடிக்க எதிர்ப்பு கொடைக்கானல் விடுதியில் மதுரை வாலிபர் தற்கொலை

கொடைக்கானல், ஜன. 9: காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க பெற்றோர் மறுத்ததால் மதுரையை சேர்ந்த வாலிபர் கொடைக்கானல் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். மதுரை நாகமலை புதுக்கோட்டை சத்திய சாய் நகரை சேர்ந்த சுல்தான் மகன் நியாஸ் அலிகான் (29). இவர் அப்பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். நியாஸ் அலிகானுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் நியாஸ் அலிகான் தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியுள்ளார். இதற்கு பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், தாங்கள் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த நியாஸ் அலிகான் நேற்று முன்தினம் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் கொடைக்கானலுக்கு வந்து முதலியார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். அன்றிரவே அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட விடுதி கண்காணிப்பாளர்கள் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் நியாஸ் அலிகான் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் சிஜாயத் அலிகான் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மாதவராஜா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Madurai ,suicide ,hotel ,anti-Kodaikanal ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை