சேந்தமங்கலம், ஜன.9: நாமக்கல் அடுத்த புதன்சந்தையில் வாரந்தோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. நேற்று கூடிய சந்தையில் நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்கார்கள் வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து தீவனம் தட்டுப்பாடின்றி கிடைப்பதால் வளர்ப்பு ஆடுகளை வாங்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சந்தையில் ஆடுகள் விலை அதிகரித்துள்ளது. கடந்தவாரம் சந்தையில் 10 கிலோ எடைகொண்ட இறைச்சி ஆடு ₹4,400க்கு விற்பனையானது. இந்த வாரம் ₹4,600 க்கும், ₹4,600க்கு விற்பனையான வளர்ப்பு ஆடு ₹4,700க்கும், பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குட்டி ஆடு ₹1,100க்கும், கிடா குட்டி ₹1200க்கும் விற்பனையானது.