×

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

பெரம்பலூர்,ஜன.8:படித்த, வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களிடமிருந்து உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது எனபெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவல கத்தில் ஜனவரி 1ம்தேதி முதல் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்காக உதவித் தொகை வழங்கிடும் திட் டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தோல்வி, 10ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வித்த குதிகளைப்பெற்று, வேலை வாய்ப்புத்துறை அலுவல கத்தில் பதிவுசெய்து, பதி வினைத்தொடர்ந்து புதுப்பித்து, 2019 டிசம்பர் 31ம் தேதிய நிலையில், 5 ஆண் டுகளுக்கு மேலாக வேலை வாய்ப் பின்றிக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகைவழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.

இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் கிடையாது. ஏனையோருக்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ72ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையினைப் பெறுவதற்கு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும் இதரஇனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வய திற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாகக் காண் பித்து, பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து 3ஆ ண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் பிப்ரவரி 28ம்தேதி வரை அனைத்து அலுவலக வே லை நாட்களிலும் பெரம்ப லூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : youths ,
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்