மதுரை, ஜன. 8: மதுரை பசுமலையை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இரும்புக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய இரண்டரை வயது மகன் விக்னேஸ்வரனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், `குல்லியன் பாரி சின்ரோம்’ என்ற அரியவகை `தசை பலமிழப்பு நோய்” பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாமல், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு விக்னேஸ்வரனுக்கு, 210 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து செயற்கை சுவாச சிகிச்சை முறையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டன. மேலும் குழந்தை நல மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.