×

தூக்கு போட்டு கர்ப்பிணி தற்கொலை

நெட்டப்பாக்கம், ஜன. 8: மடுகரையில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மடுகரை ராம்ஜி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருண்ராஜ் (25). மெடிக்கல் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சிதம்பரம், அய்யனூர் அக்கரமங்கலம் பகுதியை சேர்ந்த ஜெய் (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜெய்க்கு கடந்த 5ம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. பின்னர் ஜெய்யை தாய் வீட்டிற்கு அழைத்து செல்வதில் இரு குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஜெய் நேற்று முன்தினம் வீட்டில் நைலான் துப்பட்டாவில் தூக்கு போட்டுக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மடுகரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஜெய் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வளைகாப்பு நடைபெற்ற நிலையில் கர்ப்பிணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மடுகரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஜெய் தாயார் விஜயா நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குபதிந்து ஜெய் தற்கொலை செய்துதான் இறந்தாரா? வரதட்சணை கொடுமை நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை