×

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல், ஜன.7: நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மின் பகிர்மான வட்டம் சார்பாக, மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நடத்தப்படுகிறது. அதன்படி, 7ம் தேதி(இன்று) மாலை 3 மணிக்கு, நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. நாளை(8ம் தேதி) மாலை 3 மணிக்கு, பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 20ம் தேதி மாலை 3 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ம் தேதி(புதன்கிழமை) மாலை 3 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், அந்தந்த கோட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு,  தங்களது குறைகளை  தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Electricity Consumer Grievance Meeting ,
× RELATED அடையாறு கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது