×

அடையாறு கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: அடையாறு கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடையாறு கோட்டத்திற்கு உட்பட்ட வேளச்சேரி மெயின் ரோட்டில் அமைந்துள்ள துணை மின் நிலைய வளாகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் மின்சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அடையாறு கோட்டத்திற்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Adyar district ,CHENNAI ,Electricity Board ,Electricity Consumer Grievance Meeting ,Adyar Division ,Power Board ,Consumer ,Dinakaran ,
× RELATED தரத்தை உறுதி செய்ய தனித்துவ அடையாள...