×

கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூரில் பாழடைந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

கீழ்பென்னாத்தூர், ஜன.3: கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூரில் உள்ள பாழடைந்துள்ள நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்த நிழற்கூடத்தை சிறுநாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 5த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.தற்போது, இந்த பயணிகள் நிழற்கூடம் உரிய பராமரிப்பின்றி, பாழடைந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, மேற்கூரை எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பொதுமக்கள் நிழல்கூடத்திற்குள் செல்லவும், நிழற்கூடத்தை சுற்றிலும் முட்புதர்களும் உள்ளதால் அதிலிருந்து விஷப்பூச்சிகள் வந்து கடித்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறுநாத்தூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து தர வேண்டும். அல்லது அந்த நிழற்கூடத்தை இடித்து விட்டு புதிதாக நிழற்கூடத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்