×

ரயில் பயணியிடம் செல்போன் திருட்டு

ஈரோடு, டிச. 31:  நாகப்பட்டினம் மாவட்டம் செங்கமங்கலம் பாளையனூர் பகுதியை சேர்ந்தவர் வினோத் (22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 28ம் தேதி இரவு மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தார். அப்போது அவரது ஸ்மார்ட்போனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து ரயில் ஈரோடு ஜங்ஷனை அடைந்ததும், வினோத், ஈரோடு ரயில்வே போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : train passenger ,
× RELATED ரயில் பயணி மாயம்