வெள்ளகோவில்,டிச.30; கோவை, ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (26).பெட்ரோல் பங்க் ஊழியர். நேற்று சொந்த வேலையாக பைக்கில் கரூர் சென்று விட்டு கோவை நோக்கி திரும்பி கொண்டிருந்தார். கரூர்- கோவை ரோட்டில் ஓலப்பாளையம் அருகே செல்லும் போது எதிரில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த வேன் ஒன்று பைக் மீது மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பைக்கிற்கு பின்னால் கரூரில் இருந்து கோவை நோக்கி வந்த கார் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக் ஓட்டி வந்த கார்த்தி, காரை ஓட்டி வந்த சிவசங்கர்(44), காரில் வந்த கரூரை சேர்ந்த உமாமகேஸ்வரி (40). இவரது 20 வயது மகன், 12 வயது மகள் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்காக கார்த்தியை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கார்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். மற்ற நான்கு பேரும் கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.