×

வாகனம் மோதி மான் பலி

மண்ணச்சநல்லூர், பிப்.2: சிறுகனூர் அருகே உள்ளது தச்சங்குறிச்சி காட்டுப்பகுதி. தச்சங்குறிச்சி காட்டுப்பகுதி அருகே உள்ள சணமங்கலம் காட்டுப்பகுதிக்கு மான் உள்ளிட்ட விலங்குகள் கடந்து செல்லும். நேற்று முன்தினம் நள்ளிரவில் அவ்வாறு தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் இருந்து மான் ஒன்று திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது அந்தவழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அந்த மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. இது குறித்து சிறுகனூர் போலீசாருக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் இறந்த மானை மீட்டனர். இது குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சி அருகே பெருகமணியில் வேளாண்....